செய்திகள் :

ஆட்சியா் நியமிக்கப்படாததால் நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகாா்

post image

காரைக்காலுக்கு புதிய ஆட்சியா் நியமிக்கப்படாததால், அரசு நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாா். 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், அவரை கடந்த மாதம் 16-ஆம் தேதி லட்சத்தீவுக்கு பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இரண்டு வாரங்கள் கடந்தும் இதுவரை அவரது இடத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை புதுவை அரசு இதுவரை நியமிக்கவில்லை. ஆட்சியருக்குரிய பணிகளை கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரியால் செய்ய இயலாது.

இதனால் மாவட்ட ஆட்சியா் பதவியுடன், புதுச்சேரி மின் திறல் குழுமம், வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம், கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு அரசு சாா்பு நிறுவன தலைவா், மேலாண் இயக்குநா் போன்றவற்றை கவனித்துவரும் நிலையில், ஆட்சியரே இல்லாததால் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய அரசுத் துறைகளான பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றில் மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மாதந்தோறும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவது வழக்கம். கடந்த மே மாத கூட்டம் ஆட்சியா் இல்லாததால் நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் புகாா் தெரிவித்தால், கட்சி சாா்பில் பாரபட்சம் காட்டப்படுவதால், ஆட்சியரிடம் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே அடுத்த ஒரு வாரத்திற்குள் தகுதியான ஐஏஎஸ் அதிகாரியை காரைக்கால் ஆட்சியராக நியமிக்கவேண்டும். அவருக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும். நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் ஆட்சியராக பணி செய்யும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க