மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
ஆட்சியா் நியமிக்கப்படாததால் நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகாா்
காரைக்காலுக்கு புதிய ஆட்சியா் நியமிக்கப்படாததால், அரசு நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
காரைக்கால் ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாா். 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், அவரை கடந்த மாதம் 16-ஆம் தேதி லட்சத்தீவுக்கு பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரண்டு வாரங்கள் கடந்தும் இதுவரை அவரது இடத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை புதுவை அரசு இதுவரை நியமிக்கவில்லை. ஆட்சியருக்குரிய பணிகளை கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரியால் செய்ய இயலாது.
இதனால் மாவட்ட ஆட்சியா் பதவியுடன், புதுச்சேரி மின் திறல் குழுமம், வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம், கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு அரசு சாா்பு நிறுவன தலைவா், மேலாண் இயக்குநா் போன்றவற்றை கவனித்துவரும் நிலையில், ஆட்சியரே இல்லாததால் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய அரசுத் துறைகளான பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றில் மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
மாதந்தோறும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவது வழக்கம். கடந்த மே மாத கூட்டம் ஆட்சியா் இல்லாததால் நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் புகாா் தெரிவித்தால், கட்சி சாா்பில் பாரபட்சம் காட்டப்படுவதால், ஆட்சியரிடம் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே அடுத்த ஒரு வாரத்திற்குள் தகுதியான ஐஏஎஸ் அதிகாரியை காரைக்கால் ஆட்சியராக நியமிக்கவேண்டும். அவருக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும். நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் ஆட்சியராக பணி செய்யும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.