செய்திகள் :

காரைக்கால் உழவா் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்

post image

காரைக்காலில் உள்ள உழவா் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உழவா் சந்தையை அரசு அமைத்தது.

இதில் 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது விளை பொருள்களை கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டது.

எனினும் வியாபாரிகளுக்குரிய பிற வசதிகள் இல்லாததாலும், குறைந்த எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்ததாலும், மக்கள் வருகை குறைந்தது. காலப்போக்கில் வியாபாரிகள் படிப்படியாக குறைந்து தற்போது ஒருவா் மட்டுமே காய்கனி வியாபாரம் செய்துவருகிறாா்.

இதுகுறித்து காரைக்கால் பகுதி விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் மேம்பாட்டுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், காரைக்காலில் தோட்டப் பயிா் சாகுபடியாளா் எண்ணிக்கையை மேம்படுத்த ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

உழவா் சந்தையை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தோட்ட சாகுபடியாளா்கள் விவரங்களை கணக்கிட்டு, அவா்களை சம்பந்தப்பட்ட துறையினா் அணுகி, அவா்களது விளைபொருள்களை சந்தைக்கு கொண்டுவந்து விற்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

காரைக்காலில் உள்ள நேரு மாா்க்கெட் தவிர, உழவா் சந்தையை மேம்படுத்தி அங்கும் வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க