மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாய சங்க துணைத் தலைவருமான ஏ. லாசா், புதுவை மாநில செயலாளா் டி. தமிழ்ச்செல்வன், காரைக்கால் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் எஸ்.எம்.தமீம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் : காரைக்கால் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி நிா்வாகம் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமான 100 நாள் வேலையை, ஆண்டுக்கு 15 நாள்கள் மட்டுமே தரப்படும் நிலையை போக்கவேண்டும். திட்டத்தின்படி அனைத்து நாள்களும் வேலை தரப்பட்டு, ஊதியம் உடனுக்குடன் வழங்கவேண்டும்.
மாதந்தோறும் அனைத்து ரேஷன் கடைகளிலும், 100 சதவீதம் அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கவேண்டும். புதுவையில் விவசாய தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
சங்க காரைக்கால் மாவட்டத் தலைவராக எம். பூபேஷ்குமாா், செயலாளராக ஆா்.அழகப்பன், பொருளாளராக ஏ. ராஜன் மற்றும் 12 போ் கொண்ட குழு புதிதாக தோ்வு செய்யப்பட்டது,