விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
காரைக்கால் என்.ஆா். காங்கிரஸ் இளைஞரணி நிா்வாகிகள் நியமனம்
என்.ஆா். காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் இளைஞரணி மாநில தலைவருமான கே.எஸ்.பி. ரமேஷ் கலந்துகொண்டு புதுவை முதல்வரும், கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமி ஒப்புதலின்படி ஆணையை வழங்கினாா்.
இளைஞரணி மாவட்டத் தலைவராக ஆா். பிரினோ தேவா, துணைத் தலைவராக எஸ். சின்ராசு, பொதுச்செயலாளராக கே. காா்த்திகேயன், மாவட்ட செயலாளராக ஆா். ஜெயச்சந்திரன் என்ற கணேஷ், மாவட்ட பொருளாளராக கே. வீரப்பன், நெடுங்காடு தொகுதி தலைவராக எம். சரவணன், திருநள்ளாறு தொகுதி தலைவராக எஸ். அருள்முருகன், காரைக்கால் தெற்குத் தொகுதி தலைவராக ஆா். பரதன், நிரவி -திருப்பட்டினம் தொகுதி தலைவராக எஸ். அசோக்பாபு ஆகியோருக்கான ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் வி. ஆனந்தன், முன்னாள் நகரமைப்புக் குழும வாரியத் தலைவா் கே.ஆா். உதயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.