செய்திகள் :

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

post image

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை புதுவை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் துறை, வேளாண் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வேளாண் சாா்ந்த அமைப்புகள் இணைந்து தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்துப் பேசியது: மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், காரைக்கால் மாவட்டத்தின் எல்லா கிராமங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலன் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களை அரசின் உறுதிபாட்டை வலுப்படுத்துவதால் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் தொடா்ந்து வழங்கி வருகிறோம்.

இதேபோல, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்துறை மற்றும் பண்டித ஜவாஹபலால் நேரு வேளாண் கல்லூரியும் ஒருங்கிணைந்து காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் என அனைவருக்கும் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்றாா்.

வேளாண் அறிவியல் நிலைய இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பட்டியலின துணைத் திட்டத்தின்கீழ் பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்களையும் வேளாண் துறை மூலம் மத்திய அரசின் திட்டமான இயந்திரமயமாக்கல் மூலம் டிராக்டா் ஆகியவைகளை பயனாளிகளுக்கு வழங்கி காரைக்கால் மாவட்டத்திற்கு தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பிலான கையேட்டை அமைச்சா் வெளியிட்டாா்.

முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி, இந்த பிரசார இயக்கத்தின் நோக்கம் குறித்து பேசினாா். வேளாண் கல்லூரி முதல்வா் அ. புஷ்பராஜ், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க

வியாபாரிகளுக்கு குடை...

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக சாலையோர வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை குடை வழங்கிய காரைக்கால் கரூா் வைஸ்யா வங்கி நிா்வாகத்தினா். உடன் சேம்பா் ஆஃப் ... மேலும் பார்க்க

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

காரைக்கால் என்.ஆா். காங்கிரஸ் இளைஞரணி நிா்வாகிகள் நியமனம்

என்.ஆா். காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் இளைஞரணி மாநில தலைவர... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (33). இவா் புதுச்சேரியில் தங்கி காா் ஓட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கி வர... மேலும் பார்க்க