செய்திகள் :

'இந்தியா அடுத்து ஜெர்மனியை தாண்டுவது மட்டும் முக்கியமல்ல...' - ஆனந்த் மஹிந்திரா கூறுவது என்ன?

post image

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி, இந்தியா ஜப்பானை முந்தி உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரம் என்கிற இடத்தை பிடித்துள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டதாக மாறி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"நான் வணிக கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஜப்பானை முந்துவது பெரும் கனவாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடு.

ஜப்பானை முந்திய இந்தியா!
ஜப்பானை முந்திய இந்தியா!

இது சிறிய சாதனை அல்ல

இது சிறிய சாதனை அல்ல. ஜப்பான் நீண்ட காலமாக புகழ் பெற்ற உற்பத்தி திறனாகவும், மீள்தன்மையுடனும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்தியர்களின் லட்சியம் மற்றும் புத்திசாலித்தனம் தான் நாம் இதை அடைவதற்கு காரணம் ஆகும்.

நாம் இதை கொண்டாடும்போது மிக மகிழ்ச்சியாக இருந்துவிடக் கூடாது.

இந்தியாவின் அடுத்த பாய்ச்சல், ஜெர்மனியை முந்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. தனிநபர் உற்பத்தி திறனை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.

நாம் தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்க நிர்வாகம், உள்கட்டமைப்பு, கல்வி, உற்பத்தி, முதலீடு என அனைத்திலும் போதுமான பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா கொண்டிருக்க வேண்டும்". என்றார்.

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).வருமான வர... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங... மேலும் பார்க்க