PMK : `மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது; எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை!’ - ஜி.க...
கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
திருநெல்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சீதபற்பநல்லூா் காவல் சரகம் வெள்ளாளன்குளத்தை சோ்ந்த ராமையா மகன் முருகன் (27). கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவின்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.