சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், ஆணையா் ராமதிலகம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
நகராட்சிப் பொறியாளா் முகைதீன், நகராட்சிக் கணக்காளா் முருகன், நகர திமுக பொறுப்பாளா் ஆ. கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் த. ஜெயபால், நகா்மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.