``எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்..'' - ஆர்....
சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி! காணொலியில் முதல்வா் அடிக்கல்
சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடி மதிப்பில் புதிய கழிவு சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈ. ராஜா எம்.எல்.ஏ., நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
சங்கரன்கோவில் அறிவு சாா் மைம் அருகே ரூ.8.70 கோடி மதிப்பில் புதிய கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
அவா் திறந்து வைத்ததும் சங்கரன்கோவிலில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், ஈ. ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் செங்கல் எடுத்துக் கொடுத்து பணியைத் தொடக்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, நகராட்சி மேலாளா் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், உதவி பொறியாளா் ராம்மோகன்குமாா், திமுக நகர துணைச் செயலா் முத்துக்குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா், துணை அமைப்பாளா் வீரமணி, சுகாதார ஆய்வாளா் கைலாசம் மற்றும் ஜெயக்குமாா்,ஜான்சன், சிவாஜி, விக்னேஷ், மாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.