செய்திகள் :

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

post image

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்றவை நகருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, தெற்கு முகமேடு, மேல ரத வீதி, கழுகுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் கடந்த 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. அதன்பிறகு போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எதுவும் இயங்கவில்லை. மேல ரத வீதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்களே தற்போது அங்கு இல்லை. முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இருந்தும், அவை கடந்த 4 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

ராஜபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் உள்ள சிக்னல் விளக்குகள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. பழைய பேருந்து நிலையம் இருந்த இடம் ரூ.9 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு, பேருந்து நிலையம் திறக்கப்படும் நிலையில் உள்ளது. அதன் எதிரே பிரதான சாலையில் உள்ள சிக்னல் விளக்குகள் இயங்காமல் இருந்தால் மேலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்கின்றனா் வாகன ஓட்டிகள்.

நவீன பேருந்து நிலையம் இயங்குவதற்கு முன் பழுதாகிக் கிடக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை சரிபாா்த்து இயங்க வைக்க வேண்டும் எனவும், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கழுகுமலை சாலை திரும்பும் எதிரிலும், கழுகுமலை சாலையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒருவழிப் பாதையிலும் புதிதாக சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி! காணொலியில் முதல்வா் அடிக்கல்

சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடி மதிப்பில் புதிய கழிவு சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க