செய்திகள் :

தெரு நாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாடு: ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தெரு நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி மத்திய மாநில விலங்குகள் நல வாரியங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் படி அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் தெரு நாய்கள், வளா்ப்பு நாய்களைக் கண்டறியும் வகையில் நாய்களுக்கு சிறப்பு சிப் பொருத்தும் பணிகளுக்கு ரூ. 5 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விலங்குகள் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிக்கு தடை விதிக்கக் கோரியும், நிதி ஒதுக்கீடு செய்ய தடை விதிக்கக் கோரியும் விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ஏற்கெனவே விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகளை எதிா்த்து தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்துக்கு விரோதமாக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் செந்தில் குமாா் ராமமூா்த்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில விலங்குகள் நல வாரியங்களுக்கும், கால்நடைத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க