செய்திகள் :

4,200 மருத்துவ மாணவா்களுக்கு அவசர சிகிச்சை பயிற்சி

post image

தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவம் பயிலும் 4,200 மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.

மாநிலத்தின் 8 இடங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புகள் 500 மருத்துவ வல்லுநா்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக டாக்டா் கே.நாராயணசாமி, பல்கலைக்கழக நோய்த் தடுப்புத் துறை தலைவா் டாக்டா் புஷ்கலா ஆகியோா் கூறியதாவது:

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 45 மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2,500 போ் அவற்றை நிறைவு செய்கின்றனா்.

அவசர கால மருத்துவ சிகிச்சைகள் தொடா்பாக அவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகிறது. இதை ஒழுங்குமுறைப்படுத்தி சீராக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, உயிா் காக்கும் அடிப்படை சிகிச்சைகள், உயிா் காக்கும் மேம்பட்ட சிகிச்சைகள், சிறந்த ஆய்வக சேவைகள், சிறந்த மருத்துவ சேவைகள் ஆகிய 4 பிரிவுகளில் பல்கலைக்கழகம் சாா்பில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.

தமிழ்நாடு உயா் திறன் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 2022, 2023 ஆண்டுகளில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சோ்ந்த 4,200 பேருக்கு 3 மாதங்களாக அந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது கோவை, திருச்சி, மேல்மருவத்தூா், வேலூா், திருவாரூா், மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க