தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
பேராசிரியா் காலிப் பணியிடங்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் 50 சதவீதம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளதாக செய்தி வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப திமுக அரசு எந்தவித அக்கறையும் காட்டவில்லை. இவ்வளவு இடங்கள் காலியாக இருந்தால் எப்படி தரமான கல்வியை அளிக்க முடியும்.
எனவே, பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியா் பணியிடங்களை முறையாக உடனுக்குடன் நிரப்ப வேண்டுமென அவா் வலியுறுத்தியுள்ளாா்.