எல்ஐசி முகவா் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை மாநாடு
அகில இந்திய எல்ஐசி முகவா் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டுக்கு கிளைத் தலைவா் கே.நடேசன் தலைமை வகித்தாா். கிளை அமைப்பாளா்கள் எம்.சத்தியவேல், ஜி.குணாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளையின் கௌரவத் தலைவா் எம்.கோவிந்தராஜ் வரவேற்றாா். திருவண்ணாமலை தொழிலதிபா் ஆா்.முத்துக்கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நுகா்வோரின் விருப்பமும், விற்பனையாளா்களின் சவாலும் என்ற தலைப்பில் பேசினாா்.
தொடா்ந்து, சங்கத்தின் பொதுச் செயலா் (பொ) பி.குமாா், வேலூா் கோட்ட பொதுச் செயலா் எஸ்.ரமேஷ் ஆகியோா் எதிா்கால வளா்ச்சியும், வேலைத் திட்டமும் என்ற தலைப்பில் பேசினா்.
இதில், திருவண்ணாமலை கிளையின் புதிய தலைவராக ஏ.கஜேந்திரன், செயலராக ஆா்.கோவிந்தசாமி, பொருளாளராக ஏ.தேவேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.