பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி
பதஞ்சலிக்கு 250 லாரிகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
சரக்குப் போக்குவரத்து நிறுவனமான பதஞ்சலி பரிவாஹன் நிறுவனத்துக்கு 250 அதிநவீன லாரிகளை வழங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அசோக் லேலண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
250 அதிநவீன லாரிகளை வழங்குவதற்காக பதஞ்சலி பரிவாஹன் நிறுவனத்தின் மதிப்புமிக்க ஒப்பந்தத்தை நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மைல்கல் இரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது.
லாரிகளின் விநியோகம் தொடங்கியதைக் குறிக்கும் வகையில் முதல் கட்ட லாரிகளின் சாவிகளை அசோக் லேலண்டின் தலைவா் (எம்ஹெச்சிவி) சஞ்ஜீவ் குமாா் பதஞ்சலி பரிவாஹன் நிறுவனா் ராம் பாரத் ஜி-யிடம் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கினாா் (படம்).
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக 1916 ரக ஹாலேஜ் லாரிகள் பதாஞ்சலி பரிவாஹன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.