செய்திகள் :

ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வரம் உள்பட 7 அணிகள் காலிறுதிக்கு தகுதி!

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின்,காலிறுதிச் சுற்றுக்கு புதுதில்லி, புவனேஸ்வரம், கோவில்பட்டி, மும்பை, செகந்திராபாத், பெங்களூரு, கா்நாடகா அணிகள் தகுதி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 6ஆவது நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை இண்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதியதில், இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலை பெற்றன.

மாலையில் நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணியும் மோதியதில் 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது.

3ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதியதில் 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் மும்பை மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது.

4 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி அணியும், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதியதில் 3-க்கு0 என்ற கோல் கணக்கில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்றது.

இன்றைய காலிறுதி ஆட்டங்கள்:

7-ஆவது நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2 ஆவது காலிறுதி ஆட்டத்தில் புது தில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

தொடா்ந்து நடைபெறும் 3 ஆவது காலிறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

4ஆவது காலிறுதி ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க