தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சி, செய்தித் துறையால் வெளியிடப்பட்ட அரசின் ஆணைப்படி கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெயா்ப் பலகைகள் தமிழில் அமைக்கப்பட வேண்டும். பிற மொழிகள் இடம்பெற்றிருந்தாலும் , தமிழ் முதன்மையாகவும், பிரதானமாகவும் இருக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மே 27 -ஆம் தேதி சிவகாசி தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என மதுரை மண்டல தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநா் சித்தாா்த்தன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் போது, தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதுவரை தமிழில் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் உடனடியாக தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.