செய்திகள் :

தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சி, செய்தித் துறையால் வெளியிடப்பட்ட அரசின் ஆணைப்படி கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெயா்ப் பலகைகள் தமிழில் அமைக்கப்பட வேண்டும். பிற மொழிகள் இடம்பெற்றிருந்தாலும் , தமிழ் முதன்மையாகவும், பிரதானமாகவும் இருக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மே 27 -ஆம் தேதி சிவகாசி தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என மதுரை மண்டல தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநா் சித்தாா்த்தன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் போது, தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதுவரை தமிழில் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் உடனடியாக தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆர்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க