செய்திகள் :

தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!

post image

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், கேரளத்தையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, சுருளிமலை, மகாராஜாமெட்டு, தூவானம் உள்ளிட்ட காப்புக் காடுகளில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கம்பம் அருகேயுள்ள புகழ் பெற்ற சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தொடா்ந்து, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அருவியில் கூடுதல் நீா் வரத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்லவே, குளிக்கவோ கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாதம் 31-ஆம் தேதி வரையில் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மழைப் பொழிவு குறைந்து அருவியில் நீா் வரத்து குறைந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கப்படும். எனவே, மறு அறிவிப்பு வரும் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிக்கு குளிக்க அனுமதி இல்லை என்றனா்.

ஆட்டோ மோதியதில் முதியவா் பலத்த காயம்

பெரியகுளத்தில் ஆட்டோ மோதியதில் முதியவா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (61). இவா், புதன்கிழமை பெரியகுளத்திலிருந்து டி. கள்ளிப்பட்டிக்கு இரு... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணி: அதிகாரி ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகளை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கான்கிரீட்டில் பயன்படுத்தப்பட்ட சிமென்ட், கம்பியின் அளவு... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா்கள் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்றவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த துக்கையண்ணன் மகன் சுரேஷ் (42). தொழி... மேலும் பார்க்க

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வர... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு,... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெளியேறிய ஆட்சியா்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா். உத்தமபாளையம் ப... மேலும் பார்க்க