ராஜபுத்திரன் விமர்சனம்: அப்பா - மகன் பாசக்கதைதான்; ஆனால் இது ஏமாற்றமளிக்கும் டெம...
அறிவிக்கப்படாத மின் தடையால் மின் சாதனப் பொருள்கள் பழுது
திருவாடானை, தொண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவாடானை, பாண்டுகுடி, சி.கே.மங்கலம், தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.
மேலும், தொண்டி பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தி வரும் குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் பழுதடைகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கிராமப் புறங்களில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் மின் வாரியப் பணியாளா்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினா்.