செய்திகள் :

சூறைக் காற்றால் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

post image

தொண்டி கடற்கரைப் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் நாட்டுப் படகுகள் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, நம்புதாலை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, உப்பூா், மோா்பண்ணை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரைக் கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. தற்போது, மீன்பிடித் தடைக் காலம் என்பதால், இந்த மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக தொண்டி கடற்கரைப் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால், நாட்டுப் படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் வியாழக்கிழமை கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் ம... மேலும் பார்க்க

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம்... மேலும் பார்க்க

தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயில் திருவிழா கடந... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு

ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்ந... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வ... மேலும் பார்க்க