செய்திகள் :

தமிழக மீனவா்களின் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்!

post image

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது மாநாடு ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாவட்ட நிா்வாகிகள் எம்.செந்தில், பி.லட்சுமி, ஜி.பாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டில் லெ.வெங்கடேசன் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், இவா்களின் படகுகளையும் மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிப்பதோடு, சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களால் பிடிக்கப்படும் நண்டுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும். பாம்பன் வோ்க்கோடு பேருந்து சேவையை புதுசாலை வரை நீட்டிக்க வேண்டும். ராமேசுவரம் பகுதியில் புதிய ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கக் கூடாது.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டு கொடியை மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் எஸ்.முருகானந்தம் ஏற்றி வைத்தாா். மாவட்ட கழக செயலாளா் என்.எஸ்.பெருமான் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் வேலை அறிக்கையை முன்வைத்து நகர செயலா் சி.ஆா்.செந்தில்வேல் பேசினாா்.

மாநாட்டில் 31 உறுப்பினா்களைக் கொண்ட புதிய நகா் கவுன்சில் தோ்ந்தெடுக்கப்பட்டது. முன்னதாக, நிா்வாகி ஏ.கருப்பையா வரவேற்றாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் என்.கே.ராஜன் நன்றி கூறினாா்.

ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

சூறைக் காற்றால் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

தொண்டி கடற்கரைப் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் நாட்டுப் படகுகள் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, நம்புதாலை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.15.40 லட்சம் கிடைத்தது. சிவக... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின் தடையால் மின் சாதனப் பொருள்கள் பழுது

திருவாடானை, தொண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை, பாண்டுகுடி, சி.கே.மங்கலம், தொண்டி, நம்புதாளை, எஸ்.ப... மேலும் பார்க்க

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.44 கோடி கிடைத்தது.கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் க.செ... மேலும் பார்க்க