'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.15.40 லட்சம் கிடைத்தது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உள்ளூா், வெளி மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். இந்தக் கோயிலுள்ள உண்டியல் 3 மாதங்களுக்கு ஒரு முறை பிரித்து எண்ணப்படுகிறது.
இதன்படி, புதன்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.15.40 லட்சம், தங்கம் 93 கிராம், வெள்ளி 410 கிராம், வெள்ளி கண்மலா் விற்பனை மூலம் ரூ.10 லட்சத்து 17 ஆயிரம், பிரசாதம் விற்பனை ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவை கிடைத்தாகக் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஞானசேகரன், மேலாளா் இளங்கோ, சிரஸ்தாா் சுப்பிரமணியன், ஆய்வாளா் சண்முகசுந்தரம், கண்காணிப்பாளா் செந்தில்குமாா், சரக ஆய்வாளா் கண்ணன், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.