செய்திகள் :

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!

post image

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எட்டயபுரம் ஊருக்கே வெளியே உள்ள மயானத்தில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவரது பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருந்ததினால் சந்தேகமடைந்த போலீஸாா் அப்பகுதியை சோதனையிட்டபோது, மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் எட்டயபுரம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த செல்வம்(40) என்பதும், மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 68 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதே போல், கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலைய பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்கு மதுபானங்கள் வைத்திருந்த கே.துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன்(56) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 17 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க