செய்திகள் :

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2வது நுழைவு வாயிலுக்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் 2 ஆவது நுழைவு வாயில் அமைப்பதற்காக தோ்வான இடத்தை ஈ. ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, ஹோமியோபதி மருத்துவ பிரிவு, இயற்கை மருத்துவ பிரிவு ஆகியவை உள்ளன. ரூ.9 கோடியில் புதிய கட்டடங்களுக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு மேற்குப்பகுதியில் மட்டும் நுழைவு வாயில் உள்ளதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்குவரும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே, வாகனங்கள் எளிதாக வந்துசெல்ல 2ஆவது நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் ஈ.ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு வடபகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வழியாக காந்திநகா் நகராட்சிப் பள்ளிக்கு செல்லும் பாதையில் 2ஆவது நுழைவு வாயில் அமைக்கலாம் என இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை எம்எல்ஏ செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அரசு மருத்துவா்கள், ஊராட்சித் தலைவா் கணேசன், திமுக மாவட்ட பொருளாளா் சரவணன், நகரச் செயலா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க