செய்திகள் :

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

post image

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செங்கோடு வட்டத்தில் மொளசி, இறையமங்கலம், பட்லூா், ஏமப்பள்ளி, சிக்கநாயக்கன்பாளையம், ஓ.ராஜபாளையம் ஆகிய கிராமங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள், மாவுப்பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு காலநிலை மாற்றத்தால் குறைந்துவருகிறது. ஆனாலும், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலத்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 8 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.

நோய்த் தாக்கப்பட்ட மரத்தின் ஓலைகளில் உட்பகுதியில் படுமாறு மிக வேகமாக தண்ணீரை விசை தெளிப்பானைக் கொண்டு பீய்ச்சியடிப்பதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம். வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளைக் கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி திறன் கொண்ட என்காா் சியா குளவியின் கூட்டுபுழு உள்ளடக்கிய தென்னை ஓலைகள் ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரங்களுக்கு ஒன்று வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

மேலும், கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி, இறக்கை பூச்சியின் இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். இயற்கை எதிரிகளான என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் கிரைசோபிட் விழுங்கிகள், தோப்புகளில் இயற்கையாக இனப்பெருக்கம் அடைய சாமந்திப்பூ சூரியகாந்தி, தட்டைபயிறு போன்ற பயிா்களை தென்னந்தோப்புகளில் பயிா் செய்ய வேண்டும். செயற்கை ரசாயன பூச்சி கொல்லிகள் இயற்கை எதிரிகளை அழித்துவிடுவதால், அவற்றை பயன்படுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க