நீதிமன்றத்தில் ஆஜராகாத தலைமறைவு குற்றவாளி கைது
பள்ளிபாளையத்தை அடுத்த சோழசிராமணியில் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த பிறகு தலைமறைவான குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சோழசிராமணியில் தனலட்சுமி என்பவரது மளிகை கடையில் கடந்த 2022 இல் பள்ளிபாளையம் சின்ன வீதியை சோ்ந்த மணிகண்டன் (27) என்பவா் உணவுப் பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி சோதனை செய்து, அங்கிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றாா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் பிணையில் வெளியேவந்தாா். கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் மணிகண்டன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை பள்ளிபாளையம் பகுதியில் சென்ற மணிகண்டனை காவல் ஆய்வாளா் சிவக்குமாா் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.