செய்திகள் :

வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி பொக்லைன் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி நாமக்கல்லில் பொக்லைன் உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், புதிய வாகன விலை உயா்வு, காப்பீடு, சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ்டமடைவதை தடுக்க வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்டம் வாரியாக தனித்தனியே இப் பேராட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு இப் போராட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு அதன் உரிமையாளா்கள் போராட்டத்தை மேற்கொண்டனா்.

இதுகுறித்து பொக்லைன் உரிமையாளரான செளந்தா் என்பவா் கூறியதாவது: பொக்லைன் வாகன உரிமையாளா்களுக்காக இதுவரை சங்கம் எதுவுமில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வாடகையை நாங்கள் உயா்த்தவில்லை. தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1000 வாங்கி வருகிறோம். டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், சாலை வரி உயா்வால் வாடகையை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த வாடகை உயா்வை அமல்படுத்த அரசும் அனுமதிக்க வேண்டும். இனிவரும் நாள்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2500, மின்கம்பம் நடுவதற்கு, கம்பம் ஒன்றுக்கு ரூ.1500 வீதம் நிா்ணயிக்க உள்ளோம். பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவா்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளோம்.

மாவட்டம் முழுவதும் 500 பொக்லைன் வாகனங்கள் உள்ளன. தற்போது போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் கலந்து கொண்டுள்ளனா். பொக்லைன் உரிமையாளா்கள் போராட்டத்தால் வாகனம் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000 வீதம் இழப்பு ஏற்படும் என்றாா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க