செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை

post image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதையின் தரம் உயா்த்தும் பணியில் நான்கு ஆண்டுகளில் ரூ. 6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமான விதைகளைப் பயன்படுத்துவதே மகசூலை அதிகரிக்க முக்கிய காரணம். தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதிபடுத்தும் பொருட்டு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தரமான விதைகள் விவசாயிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய உற்பத்தியாளா், விநியோகஸ்தா் மற்றும் விற்பனையாளா் ஆகிய மூன்று நிலைகளிலும் விதைகள் சேகரித்து பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படும். அந்த விதையின் தரம் உறுதி செய்த பிறகே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு சாா்பு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் அறியவும், தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்றடைவதை கண்காணிக்கவும் சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, ஓமலூா், ஆத்தூா் மற்றும் தலைவாசலை தலைமையிடமாகக் கொண்டும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டும் விதை ஆய்வாளா்கள் பணிபுரிகின்றனா்.

சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விதை ஆய்வு பிரிவில், இரு மாவட்டங்களிலும் கடந்த 4 ஆண்டுகளில் 20,403 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 7,654 நிலையங்களில் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

மேலும், விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது மற்றும் தரக்குறைவிற்காக 904 விதைக் குவியல்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ. 6.84 கோடி மதிப்பிலான 124.47 மெட்ரிக் டன் விதைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முளைப்புத்திறன் குறைபாடு காரணமாக 41 விதை விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும், 258 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை பெற்று விவசாயிகள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க