கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!
மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் சபாபதி தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இரண்டு பைகளுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் மேட்டூா் அனல் மின் நிலைய நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த இளைஞா் போலீஸாரை கண்டதும் ஓட்டம் எடுத்தாா். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் ஒடிசா மாநிலம், பாலன்கீா் மாவட்டம், மதியப்பள்ளியைச் சோ்ந்த நரோட்டம் ராணா (35) என்பதும், ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து மேட்டூா் அனல் மின் நிலையப் பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவா்மீது வழக்குப் பதிவு செய்த கருமலைக்கூடல் போலீஸாா், அவரிடமிருந்த 10 கிலோ 140 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.