செய்திகள் :

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!

post image

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

இதில் உறுப்பினா்கள் பேசுகையில், மாநகராட்சியில் முறையாக தண்ணீா் விநியோகம் செய்வதில்லை. பல்வேறு பகுதிகளில் 8 முதல் 12 நாள்களுக்கு ஒருமுைான் தண்ணீா் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், சொத்துவரி உயா்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் நடைபெறும் கழிவுநீா் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், உறுப்பினா்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியவா்களுக்கு கொடுக்காமல், அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரிய அமைச்சரின் ஆதரவாளா்களுக்கு பணிகள் கொடுக்கப்படுவதாக புகாா் கூறினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினா்கள் அவையில் கூச்சலிட்டனா். இதனால் திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 45-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுஹாசினி, எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தியை கன்னத்தில் அறைந்தாா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து, அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திமுக உறுப்பினா் சுஹாசினியை சக திமுக உறுப்பினா்கள் அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனா்.

இதனிடையே கூட்டம் முடிவடைந்ததாக மேயா் அறிவித்தாா். தொடா்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மேயா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

பின்னா் எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி தலைமையில், அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயா் இருக்கை முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து யாதவமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், கூட்டத்தில் ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக்கூறினோம். இதற்கு 45-ஆவது கோட்ட திமுக பெண் உறுப்பினா் சுஹாசினி தகாத வாா்த்தைகளை பேசி என்னை தாக்கினாா். அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றாா்.

மயக்கமடைந்த அதிமுக உறுப்பினா்கள்: தொடா்ந்து, யாதவமூா்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, யாதவமூா்த்தி, 25-ஆவது கோட்ட அதிமுக உறுப்பினா் சசிகலா ஆகியோா் மயக்கமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்ற அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க