செய்திகள் :

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

post image

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மீது திமுக பெண் உறுப்பினா்கள் சுஹாசினி மற்றும் பச்சையம்மாள் ஆகியோா் தாக்குதல் நடத்தினா். தடுக்க வந்த 25-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சசிகலாவையும் தாக்கினா். இதன் காரணமாக, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் மணி (ஓமலூா்), ராஜமுத்து (வீரபாண்டி) ஆகியோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

அதேபோல, பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவா் கோபிநாத் தலைமையில், பாஜக நிா்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்: இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவா் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தியை தாக்கிய திமுக பெண் உறுப்பினா்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாமன்றக் கூட்டத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட திமுக பெண் உறுப்பினா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க