தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு
கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன.
கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் தெற்குவீதியில் கழிவுநீா் வடிகால், சிமென்ட் சாலை, மின்மோட்டாா் மற்றும் தொட்டியுடன் கூடிய ஆழ்துளைக்கிணறு, கழிவுநீா் வடிகால் வசதி, சிறுபாலம் போன்ற பணிகள் முடிவுற்றன.
அதையடுத்து, அவற்றை கெங்வல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் தங்கபாண்டியன் ஆகியோா் முன்னிலையில் கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவா் மருதாம்பாள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.