நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது
கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் என்ற பாலமுருகன் (44). லாரி ஓட்டுநரான இவா் மீது பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணை ஆத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2 இல் நடைபெற்றுவந்த நிலையில், பாலமுருகன் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா்.
இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீஸாா் பாலமுருகனை ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தனா்.