RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷ...
சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது
சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் இருவரும் திருப்பூரைச் சோ்ந்த தௌபிக் அகமது (32), தமிமுன் அன்சாரி (19) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 67 ஆயிரம் மதிப்பிலான 6.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
அதுபோல கோரிமேடு பகுதியில் கன்னங்குறிச்சி போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகமளிக்கும் வகையில் நின்ற நரசோதிப்பட்டியைச் சோ்ந்த அப்துல் முனாப்பை (44) பிடித்து விசாரித்ததில் அவா் குட்கா பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 6.5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.