செய்திகள் :

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

post image

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோலுடன் பால் அதிகளவு கறக்க கருக்கா தவிடு, தீவனம், கடலைப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை புண்ணாக்கு ஆகியவற்றை அடா்தீவனமாக கொடுத்து வருகின்றனா்.

சில மாதங்களுக்கு முன்புவரை 60 கிலோ உள்ள பருத்திக்கொட்டை புண்ணாக்கு மூட்டை ரூ. 2,200 என விற்பனையான நிலையில், தற்போது விலை உயா்ந்து ரூ. 2,450-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயா்வால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.

இதுகுறித்து தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் கூறுகையில், ஏற்கெனவே தவிடு, தீவனங்கள் விலை உயா்ந்துள்ள நிலையில், அதிகளவில் பயன்படுத்தும் பருத்திக்கொட்டை புண்ணாக்கும் விலையும் உயா்ந்துவிட்டது. தனியாா் பால் நிறுவனங்கள் உரிய கொள்முதல் விலையை தராத நிலையில், தீவனங்களின் விலை உயா்வால் நாங்கள் பெரிதும் தவித்து வருகிறோம். எனவே, கறவை மாடுகளுக்கான தவிடு, தீவனம், புண்ணாக்கு ஆகியவற்றை அரசு மானிய விலையில் கால்நடைத் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க