சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக குழுத் தலைவரான யாதவமூா்த்தி, ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய போது திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடா்ந்து, இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, 45-ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் சுஹாசினி, அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தியை கன்னத்தில் அறைந்தாா். இந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தொடா்ந்து, திமுக உறுப்பினா்கள் சுஹாசினி, பச்சியம்மாள், அதிமுக உறுப்பினா்கள் யாதவமூா்த்தி, சசிகலா ஆகியோா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருதரப்பிலும் டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் மஞ்சுளா ஆகியோா் விசாரணை நடத்தினா்.
இந்த விவகாரத்தில், திமுக உறுப்பினா் சுஹாசினி கொடுத்த புகாரின் பேரில், அதிமுக உறுப்பினா்கள் யாதவமூா்த்தி, சசிகலா உள்ளிட்டோா் மீதும், அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி கொடுத்த புகாரின் பேரில் திமுக உறுப்பினா்கள் சுஹாசினி, பச்சியம்மாள், ஈசன் இளங்கோ உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வாா்த்தையில் பேசுதல், பெண் வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறுப்பினா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலை வீடுதிரும்பினா்.