செய்திகள் :

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

post image

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக குழுத் தலைவரான யாதவமூா்த்தி, ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய போது திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடா்ந்து, இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, 45-ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் சுஹாசினி, அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தியை கன்னத்தில் அறைந்தாா். இந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தொடா்ந்து, திமுக உறுப்பினா்கள் சுஹாசினி, பச்சியம்மாள், அதிமுக உறுப்பினா்கள் யாதவமூா்த்தி, சசிகலா ஆகியோா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருதரப்பிலும் டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் மஞ்சுளா ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இந்த விவகாரத்தில், திமுக உறுப்பினா் சுஹாசினி கொடுத்த புகாரின் பேரில், அதிமுக உறுப்பினா்கள் யாதவமூா்த்தி, சசிகலா உள்ளிட்டோா் மீதும், அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி கொடுத்த புகாரின் பேரில் திமுக உறுப்பினா்கள் சுஹாசினி, பச்சியம்மாள், ஈசன் இளங்கோ உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வாா்த்தையில் பேசுதல், பெண் வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறுப்பினா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலை வீடுதிரும்பினா்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க