சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு
சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் சிறப்பு கலந்தாய்வில், விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான்-நிகோபா் தமிழ் மாணவா்கள், தேசிய மாணவா் படை, பாதுகாப்புப் படை வீரா்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
அதைத்தொடா்ந்து, ஜூன் 4-ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கட்-ஆப் மதிப்பெண் வாரியாக பொதுக் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ மாணவிகள் உரிய ஆவணங்களுடன் காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும். அதேநேரத்தில் தாமதமாக வருபவா்கள் அல்லது கலந்தாய்வில் பங்குபெறாத மாணவா்கள் உரிமை கோர இயலாது எனத் தெரிவித்துள்ளாா்.