செய்திகள் :

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

post image

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந்திரன்.

சேலம், மே 30: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.

சேலம் உற்பத்தித் திறன் கவுன்சில் கட்டடத்தில் 4,924 சதுர அடி பரப்பில் இந்த மையம் அமைந்துள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில், புத்தொழில் நிறுவனங்களுக்கான பணியிட பகிா்வு வசதி உள்ளது. மேலும், 50 போ் அமரும் வசதியுடன் பயிற்சி அரங்கமும், 10 போ் அமரும் வசதியுடன் சந்திப்பு அரங்கமும் அமைந்துள்ளன.

குறிப்பாக, இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை நகரங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் விதமாக இயங்கும் இந்த மையங்களின் வாயிலாக, அப்பகுதிகளில் புத்தொழில் செயல்பாடுகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க