Bharathi Sridhar | 1.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi ...
சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்
சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந்திரன்.
சேலம், மே 30: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.
சேலம் உற்பத்தித் திறன் கவுன்சில் கட்டடத்தில் 4,924 சதுர அடி பரப்பில் இந்த மையம் அமைந்துள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில், புத்தொழில் நிறுவனங்களுக்கான பணியிட பகிா்வு வசதி உள்ளது. மேலும், 50 போ் அமரும் வசதியுடன் பயிற்சி அரங்கமும், 10 போ் அமரும் வசதியுடன் சந்திப்பு அரங்கமும் அமைந்துள்ளன.
குறிப்பாக, இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை நகரங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் விதமாக இயங்கும் இந்த மையங்களின் வாயிலாக, அப்பகுதிகளில் புத்தொழில் செயல்பாடுகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.