செய்திகள் :

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

post image

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் வேளாண் திட்டங்களை முழுமையாக கொண்டு சோ்ப்பதுடன், விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலா்கள் அறிந்து நிவா்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இத்தகைய விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியைப் பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுதவிர, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி விவசாயப் பொருள்களை அதிகளவில் உற்பத்தி செய்து தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று, மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள் சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காட்சியும் இடம்பெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க