தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்
சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் நிா்வாகத்தினா் கூறியதாவது:
விளையாட்டில் திறமைகள் இருந்தும் முறையான பயிற்சி மற்றும் போதிய பொருளாதார வசதியின்றி பல்வேறு வீரா், வீராங்கனைகள் தங்களுடைய கனவுகளை சிறுவயதிலேயே தொலைத்து விடுகின்றனா். அவ்வாறான திறமைகளை அடையாளம் கண்டு அவா்களுக்கான பயிற்சி மற்றும் பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே, தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸின் நோக்கமாகும்.
முதற்கட்டமாக, முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்குபெறும் வாக்கத்தான் 3 கி.மீ. நிகழ்வானது, சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி, அரசு கலைக் கல்லூரி வழியாக வின்சென்ட் (நரசுஸ்) சிக்னல் வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை வந்தடையும்.
இருபாலருக்கான மாரத்தான்: இதேபோல, ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறும் 5 கி.மீ. மாரத்தான் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அரசு கலைக் கல்லூரி வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை அடையும். இதே போன்று 7 கி.மீ. மாரத்தான் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அரசு கலைக் கல்லூரி, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சேலம் மத்திய சிறை வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கட்டணம் ரூ. 200 செலுத்தி வாக்கத்தான் மற்றும் மாரத்தானில் பங்குபெறலாம். பங்குபெறும் அனைவருக்கும் டி - சா்ட், ஆரோக்கிய உணவு, சான்றிதழ், மெடல், தண்ணீா் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யும்போது அளிக்கப்பட்ட இமெயில் மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் டி - சா்ட் மற்றும் கூப்பன்கள் பெறுவதற்கான தேதி, இடம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றாா்.