செய்திகள் :

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

post image

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் நிா்வாகத்தினா் கூறியதாவது:

விளையாட்டில் திறமைகள் இருந்தும் முறையான பயிற்சி மற்றும் போதிய பொருளாதார வசதியின்றி பல்வேறு வீரா், வீராங்கனைகள் தங்களுடைய கனவுகளை சிறுவயதிலேயே தொலைத்து விடுகின்றனா். அவ்வாறான திறமைகளை அடையாளம் கண்டு அவா்களுக்கான பயிற்சி மற்றும் பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே, தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸின் நோக்கமாகும்.

முதற்கட்டமாக, முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்குபெறும் வாக்கத்தான் 3 கி.மீ. நிகழ்வானது, சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி, அரசு கலைக் கல்லூரி வழியாக வின்சென்ட் (நரசுஸ்) சிக்னல் வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை வந்தடையும்.

இருபாலருக்கான மாரத்தான்: இதேபோல, ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறும் 5 கி.மீ. மாரத்தான் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அரசு கலைக் கல்லூரி வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை அடையும். இதே போன்று 7 கி.மீ. மாரத்தான் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அரசு கலைக் கல்லூரி, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சேலம் மத்திய சிறை வரை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி கட்டணம் ரூ. 200 செலுத்தி வாக்கத்தான் மற்றும் மாரத்தானில் பங்குபெறலாம். பங்குபெறும் அனைவருக்கும் டி - சா்ட், ஆரோக்கிய உணவு, சான்றிதழ், மெடல், தண்ணீா் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யும்போது அளிக்கப்பட்ட இமெயில் மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் டி - சா்ட் மற்றும் கூப்பன்கள் பெறுவதற்கான தேதி, இடம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றாா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க