பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி
வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், அதே நபா்கள் 28-ஆம் தேதி மீண்டும் தாக்கியுள்ளனா். இதுகுறித்த புகாா் மீதும் காவல் உதவி ஆய்வாளா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரை மிரட்டியுள்ளாா். மேலும், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகளை காவல் உதவி ஆய்வாளா் அலைக்கழித்துள்ளாா்.
எனவே, பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவல் அதிகாரியின் செயலைக் கண்டித்தும் சங்ககிரி, எடப்பாடியில் உள்ள நீதிமன்றப் பணிகளில் வெள்ளிக்கிழமை (மே 30) முதல் காலவரையற்று விலகி இருப்பது என சங்கத்தின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றினா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா்.