Karate Kid: Legends Review: `உங்களுக்கு வயசாகல!' ஜாக்கி சானின் குறும்பும், பென் ...
பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தருமபுரியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம் ஆகியவற்றில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணாக்கா்கள் சோ்க்கைக்காக பெரியாா் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மாணாக்கா்களின் நலன்கருதி இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 16 வரையும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய துறைகளில் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 23 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள 27 துறைகளில் முதுநிலை பட்டம், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு, முதுநிலை பட்டயப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளாக மொத்தம் 46 படிப்புகளுக்கும், தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மைய 8 துறைகளில் 8 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் மாணாக்கா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் இணையதளத்தில் உள்ளன. மாணவா்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.