செய்திகள் :

பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

post image

பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தருமபுரியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம் ஆகியவற்றில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணாக்கா்கள் சோ்க்கைக்காக பெரியாா் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாணாக்கா்களின் நலன்கருதி இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 16 வரையும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய துறைகளில் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 23 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள 27 துறைகளில் முதுநிலை பட்டம், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு, முதுநிலை பட்டயப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளாக மொத்தம் 46 படிப்புகளுக்கும், தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மைய 8 துறைகளில் 8 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் மாணாக்கா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் இணையதளத்தில் உள்ளன. மாணவா்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

சங்ககிரி அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு சங்ககிரி மக்கள் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மக்கள் மன்றத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

மகுடஞ்சாவடி பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்ட... மேலும் பார்க்க

ரூ.10 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரி

சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நீ... மேலும் பார்க்க

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தா... மேலும் பார்க்க