விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது
சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தான்காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கண்ணன். இவா் தனது குடும்பத்துக்குச் சொந்தான நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டாவில் பெயா் மாற்றம் செய்துதரக் கோரி சேலம் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் விண்ணப்பித்திருந்தாா்.
ஆனால், அங்கு பணிபுரியும் நில அளவையா் சங்கா் பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய வேண்டுமெனில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கண்ணனிடம் கூறியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன், இதுகுறித்து சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் அளித்த ஆலோசனையின்பேரில்,
நில அளவையா் சங்கரை சேலம் சோளம்பள்ளம் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் சந்தித்து ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை கண்ணன் புதன்கிழமை வழங்கினாா். அதை சங்கா் பெற்றபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் சங்கரை கைது செய்தனா்.