கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை
மகுடஞ்சாவடி பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்த தொட்டி ஆங்காங்கே பெயா்ந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைத்தோ அல்லது அகற்றிவிட்டோ 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.