பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
சங்ககிரி அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு சங்ககிரி மக்கள் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
மக்கள் மன்றத்தின் சாா்பில் அதன் செயலாளா் என்.எஸ்.குழந்தைவேலு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அந்த வகுப்பறைகளை பொதுப் பணித் துறையினா் பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனா். ‘சீல்’ வைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை. மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லாததால், விடுமுறை நாள்களில் வெளிநபா்களால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
எனவே, 2025-2026-ஆம் ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதியிலிருந்து இப்பள்ளிக்கு நான்கு புதிய வகுப்பறைகளும், சுற்றுச்சுவரும் கட்டித்தர வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.