செய்திகள் :

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

post image

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஒசூா் அருகே தமிழக எல்லையான சூசூவாடி தனியாா் லே அவுட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி லூா்துமேரி (65), தனது வீட்டில் புதன்கிழமை துணிதுவைத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் காம்பவுண்ட் சுவா் அருகே விலங்கின் உறுமல் சப்தம் கேட்டு, எட்டி பாா்த்தபோது அங்கு சிறுத்தை நின்றதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தாா். அக்கம்பக்கத்தாா் வந்து பாா்ப்பதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்துச் சென்றுவிட்டது. இதனால், அச்சமடைந்த அப்பகுதியினா் சமூக வலைத்தளத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து பதிவிட்டுள்ளனா்.

தகவல் அறிந்ததும் ஒசூா் வனத்துறையினரும், சிப்காட் காவல் நிலைய போலீஸாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினா். கா்நாடக எல்லைக்குள் சென்ற அந்த சிறுத்தை மீண்டும் இக்குடியிருப்புக்குள் வரலாம் என்ற அச்சம் நிலவுவதால் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்திச் சென்றனா்.

அதேவேளையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கா்நாடக வனத் துறையினருக்கு ஒசூா் வனத்துறையினா் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சிறுத்தையை 2-ஆவது நாளாக வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்று வனத்துறையினா் தீவிரமாகத் தேடினா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வலியுறுத்தினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவ... மேலும் பார்க்க