பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு
மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (63). விவசாயி. இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரிலிருந்து தருமபுரிக்குச் செல்லும் பேருந்தில் அரசம்பட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அப்போது, அடையாளம் தெரியாத இரு பெண்கள் இவருடன் பயணித்தனா். அந்த பெண்கள், இருவரும் வழியிலேயே பேருந்திலிருந்து இறங்கியுள்ளனா். களா்பதி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது, மாதவன் தான் வைத்திருந்த பையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து, மாதவன், தன்னுடன் பயணித்த இரு பெண்கள் பணத்தைத் திருடிச் சென்ாக அளித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து இரு பெண்களையும் தேடி வருகின்றனா்.