செய்திகள் :

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

post image

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பைரமங்கலம் கிராமத்தில் மயானம் அருகே பாலம் அமைக்க ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, காருகொண்டபள்ளி கோயில் அருகில் ரூ. 5 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அதே கிராமத்தில் ரூ. 7 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணி, மாதவரம் அக்ரஹாரத்தில் ரூ. 16 லட்சத்தில் சிமென்ட் சாலை, பாலம் அமைக்கும் பணி உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் நடைபெறவுள்ளன.

பைரமங்கலம், குந்துமாரணபள்ளி ஊராட்சி பகுதிகளில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் இப்பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

அதேபோல, அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானத்துக்குச் செல்ல ரூ.5 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, குந்துமாரனப்பள்ளி ஊராட்சியில் சங்கராபுரம் கிராமத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போத்திசந்திரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜைகளை எம்எல்ஏ டி. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி, முன்னாள் கவுன்சிலா் பிரசாந்த், ஊராட்சி ஒன்றிய துணை தலைவா் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், லோகேஷ் சந்திரா அப்பா கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வலியுறுத்தினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவ... மேலும் பார்க்க