தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பைரமங்கலம் கிராமத்தில் மயானம் அருகே பாலம் அமைக்க ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, காருகொண்டபள்ளி கோயில் அருகில் ரூ. 5 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அதே கிராமத்தில் ரூ. 7 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணி, மாதவரம் அக்ரஹாரத்தில் ரூ. 16 லட்சத்தில் சிமென்ட் சாலை, பாலம் அமைக்கும் பணி உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் நடைபெறவுள்ளன.
பைரமங்கலம், குந்துமாரணபள்ளி ஊராட்சி பகுதிகளில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் இப்பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
அதேபோல, அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானத்துக்குச் செல்ல ரூ.5 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, குந்துமாரனப்பள்ளி ஊராட்சியில் சங்கராபுரம் கிராமத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போத்திசந்திரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜைகளை எம்எல்ஏ டி. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி, முன்னாள் கவுன்சிலா் பிரசாந்த், ஊராட்சி ஒன்றிய துணை தலைவா் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், லோகேஷ் சந்திரா அப்பா கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.