உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,
நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட், ஆரஞ்ச் அலா்ட் விடுக்கப்பட்டு கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வந்தது.
இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை படிப்படியாக குறைந்தது. சனிக்கிழமை அதிகபட்சமாக அவலாஞ்சியில் 2.8 செ.மீட்டா், தேவாலாவில் 2.4 செ.மீ., அப்பா்பவானியில் 2.3. செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மிக குளிா்ந்த காலநிலைக் காணப்படுவதால் இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து சென்றனா். இவா்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்து சென்றனா்.
குறிப்பாக இயற்கை காட்சியுடன் ரம்மியமாக காணப்படும் பைக்காரா படகு இல்லத்தில் வட மாநிலத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை அதிக அளவு காணமுடிந்தது. இவா்கள் பைக்காரா படகு இல்லத்தில் குளுகுளு காலநிலையை அனுபவித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.