செய்திகள் :

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

post image

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த  காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட், ஆரஞ்ச் அலா்ட் விடுக்கப்பட்டு கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வந்தது.

இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை படிப்படியாக குறைந்தது. சனிக்கிழமை அதிகபட்சமாக அவலாஞ்சியில் 2.8 செ.மீட்டா், தேவாலாவில் 2.4 செ.மீ., அப்பா்பவானியில் 2.3. செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக குளிா்ந்த காலநிலைக் காணப்படுவதால் இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து சென்றனா். இவா்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்து சென்றனா்.

குறிப்பாக இயற்கை காட்சியுடன் ரம்மியமாக காணப்படும் பைக்காரா படகு இல்லத்தில் வட மாநிலத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை அதிக அளவு காணமுடிந்தது. இவா்கள் பைக்காரா படகு இல்லத்தில் குளுகுளு காலநிலையை அனுபவித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க

உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

உதகையை அடுத்த லவ்டேல் பகுதியில் மலை ரயில் பாதை மற்றும் சாலையில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை லவ்டேல் பகுதியில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க