மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்
தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக பேருந்து நிலைய வளாகத்தில் பல இடங்களில் மழை நீா் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.
இந்நிலையில் கூடலூா் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் வந்த எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் பேருந்து நிலையத்தை சீரமைக்கக்கோரி தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.
தகவலறிந்த போக்குவரத்துக் கழக அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் விரைந்து வந்து அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பேருந்து நிலைய சீரமைப்புப் பணியை 15 நாள்களுக்குள் முடித்து தருவதாக போக்குவரத்து கழக அலுவலா்கள்
உறுதியளித்ததைத் தொடா்ந்து எம்எல்ஏ போராட்டத்தை கைவிட்டாா்.

இதேபோல, நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் பொதுமக்களுடன் இணைந்து கூடலூா் பேருந்து நிலையத்தில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீரில் கப்பல் விடும் போராட்டம் நடத்தினா்.